EA Info

2023.09.04-உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : அதிர்ச்சியூட்டும் ஆவணப்படத்தை வெளியிடவுள்ள செனல் 4

2023.09.04-உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : அதிர்ச்சியூட்டும் ஆவணப்படத்தை வெளியிடவுள்ள செனல் 4

2019 ஆம் ஆண்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் குண்டுத்தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளைக் கொண்ட மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆவணப்படத்தை பிரித்தானியாவின் செனல் 4 வெளியிட போவதாக அறிவித்துள்ளது.

குறித்த ஆவணப்படத்தை செப்டம்பர் 5 ஆம் திகதி ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதான தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சி

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பில், “Sri Lanka’s Easter Bombings – Dispatches”  என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

அரசாங்க அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தும் அரசாங்கத்தின் தகவல்களை அம்பலப்படுத்துவோரால் முன்வைக்கப்பட்ட புதிய தகவல்களின் வெளிச்சமாக இந்த நிகழ்ச்சி அமையவுள்ளது என செனல் 4 அறிவித்துள்ளது.

Source- Tamilwin

Leave a Reply